யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கொரோனா பரிசோதனைக்கூடத்தில் 350 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர்கள் இருவரும் மன்னாரின் நானாட்டான் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏனைய 348 பேருக்கும் கொரோனாத் தொற்றில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், மன்னார்